2025 ஜூன் 12, வியாழக்கிழமை

ஹெலியைப் படம்பிடித்தவர் பொலிஸ் பிணையில் விடுதலை

Thipaan   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலைபேசியில் காணொளிப் பதிவு செய்ததாகக் கூறப்படும் இளைஞன், பொலிஸ் பிணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளான்.

அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாலை தரையிறங்கிய போதே, வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆசைக்காகவே தான், வீடியோ எடுத்ததாக தெரிவித்திருக்கும் அவர், லிந்துலையை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், வெள்ளவத்தையில் தங்கியிருந்து லொறிச் சாரதியாகக் கடமையாற்றுகின்றார் என்றும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்திருந்தது.

அவர் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மற்றும் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்நிலையிலேயே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரத்தினபுரிக்கு சென்று ஹெலிகொப்டரில் திரும்பியமை குறிப்பிடத்தக்கதாகும். 

தன்னுடைய பிள்ளைகளுக்கு காண்பிப்பதற்காகவே தான், இவ்வாறு படம் பிடித்ததாக சந்தேகநபர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13