2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஹட்டனிலிருந்து சுற்றுலாச் சென்ற மூவர் கடலில் மூழ்கி பலியாகினர்

Editorial   / 2019 ஜூன் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

யால கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் இருவர்  கடலில் அடித்துச் ​செல்லப்பட்டு,  உயிரிழந்துள்ளார்களென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் கிரிந்த பொலிஸ் பிரிவின் யால கடற்பரப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாய், தந்தை, இரு மகள்மார் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்ட நால்வரும் கிரிந்த, தெம்பருவெவ வைத்தியசாலைகளில் அனுமதிபக்கப்பட்ட பின்னர், தந்தையும் மகள்கள் இருவரும் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இச்சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட தாய் மேலதிக சிகிச்சைகளுக்காக   அம்பாறை  வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாரென்றும் இவர்கள் ஹட்டனிலிருந்து யாலப் பகுதிக்கு சுற்றுலா வந்தவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .