2025 ஜூன் 18, புதன்கிழமை

“ஹரக் கட்டா”வுக்கு எதிராக வழக்குக்கு திகதி குறிப்பு

Janu   / 2025 மே 28 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பில் பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு,  ஜூன் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “ஹரக் கட்டா” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .