2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஹரீனின் உரைக்கு ஜனகன் கண்டனம்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் ​வேட்பாளர் ஹரீன் பெர்ணான்டோ கூறிய கருத்தை கண்டிப்பதாக கூறிய அந்த கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, கார்தினாலின் கருத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாமெனவும் கோரிக்கை விடுத்தார்.  

கொழும்பு வௌ்ளவத்தையில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு  மேலும் கருத்துரைத்த அவர், 

நாட்டில் அரசியலில் ஈடுபடுவோர் மதகுருமார் பற்றியும், மதகுருவானர்கள் அரசியல் பற்றியும் பேசுவது தவறானதெனவும் தெரிவித்தார். 

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் ஹரீன் பெர்ணான்டோ, ​கொழும்பு பேராயர் மெல்கம் இரஞ்சித் ஆண்டகையின் உரைக்கு அரசியல் சாயம் தீட்டி பேசியது கண்டத்துக்குரியதெனவும்,  அந்த உரை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நிகழ்த்தப்பட்ட உரை அல்லவெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X