Editorial / 2025 நவம்பர் 06 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட எப்பாவல கட்டியாவ அதிபர் மற்றும் அவருடைய மகனை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் காயத்ரி ஹெட்டியாராச்சி, அனுராதபுரம் காவல் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வியாழக்கிழமை (06) அனுமதி வழங்கினார்.
முக்கிய சந்தேக நபர் அனுராதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைவராகவும், தன்னார்வத்துடன் அதிபராகப் பணியாற்றி வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எப்பாவல நல்லமுதாவ வீதியில் ஒரு வாரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சோதனையை நடத்தி சந்தேக நபர்களைப் போதைப்பொருட்களுடன் கைது செய்ததாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அதிபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் எப்பாவல, எட்டகல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ கிராம், 185 கிராம், 400 மில்லிகிராம் ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் மின்னணு தராசு மற்றும் அருகிலுள்ள தொட்டியில் கொட்டப்பட்ட பொலிதீன் சீலர் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன.
சில நாட்களுக்கு முன்பு அதிபரின் மகனும் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார், மேலும் அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago