Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 01 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளையில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான ஹெரோய்ன் போதைப் பொருள் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிக்கூடிய பெறுமதி மிக்க ஹெரோய்ன் தொகை இதுவாகும் என்று தெரிவித்ததோடு, குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக, தெஹிவளை பகுதியில் இப்பாரியளவிலான ஹெரோய்ன் தொகை வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில், குறித்த வீடே வெகுநாள்களாக ஹெரோய்ன் போதைப் பொருள் விநியோகத்துக்கான மத்திய கேந்திர நிலையமாக விளங்கிவந்ததாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
3 hours ago
7 hours ago