2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிரான மனு; சட்டமா அதிபர் கோரிக்கை

Editorial   / 2019 மே 31 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு மனு,  உயர் நீதிமன்றத்தில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசார​ணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெல்லம்பிட்டய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க, சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .