2025 ஜூன் 30, திங்கட்கிழமை

திருமலை பாடசாலைகளின் மலசலகூட வசதிகளை மேம்படுத்த ரூ.11.6 மில்லியன் ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 10 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை வலயக் கல்வி பிரிவில் உள்ள 72 பாடசாலைகளில் 39 பாடசாலைகளுக்கு மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் யுனிசெப் நிறுவனம் 11.6 மில்லியன் ரூபாய்கள் வழங்கி உள்ளது.
 
மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய நீரியல் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

பாடசாலை அதிபர்கள்,  பாடசாலை அபிவிருத்தி சங்கங்களின் செயலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நீரியல் மீன்பிடித்துறை  பிரதி அமைச்சர் சுசுந்த புஞசிநிலமேயின் செயலாளர்  ரத்நாயக்கா கலந்து கொண்டு இதனை  அமைக்கும் பணிகள் பற்றியும், ஏன்  இவ்வொதுக்கீடுகள் கிடைத்தது என்பது பற்றியும் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X