2025 மே 07, புதன்கிழமை

திருகோணமலை கடற்பரப்பில் உட்பிரவேசித்த 16 மீனவர்கள் கைது

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை, சம்பூர் அதியுயர் பாதுகாப்புக் கடற்பரப்பில் 6 மீன்பிடிப் படகுகளுடன் 16 மீனவர்கள்  கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

திருகோணமலை, சம்பூர் அதியுயர் பாதுகாப்புக் கடற்பரப்பில் உட்பிரவேசித்ததாகக் கருதப்படும் 6 மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டன. அத்துடன் மீன்பிடிப்படகுகளிலிருந்த  16 மீனவர்களும்  கைதுசெய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 16 மீனவர்களும் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X