Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 10 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உபுள் வீரவர்த்தன அவர்களால் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட நியமனத்திற்கு இனங்க 20 சிற்றூழியர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரமவின் அஙகீகாரத்துடன் 51 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் சிற்றூழியர் நியமனம் வழங்க்கட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு மோசடியான முறையில் செயலாளர் 20 பேருக்கு நியமனம் வழங்கி இருந்தார். இது பின்னர் கண்டறியப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் இவர்களின் நியமனத்தை நிறுத்தக் கோரி பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கத்திற்கு அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.
இதற்கு இணங்க பிரதம செயலாளர் புதிய கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.புஸ்பகுமாரவிற்கு இன்று கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இதற்கிணங்க 20 சிற்றூழியர்களும் திங்கட்கிழமை இன்று தொடக்கம் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago