Suganthini Ratnam / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
சட்டம் தொடர்பாக கிண்ணியா மற்றும் தம்பலாகமம் ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றும் கிராம சேவையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் திருகோணமலைக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வின்போது இலங்கைகளில் நீதிமன்ற அமைப்புகள், அரச காணிகளின் நிர்வாகத்தில் கிராம சேவையாளர்களின் பங்களிப்பு, நீதிமன்றங்களில் கிராம சேவையாளர்களின் பங்களிப்பு, கிராம சேவகர் மக்கள் பட்டயம், குடும்பச் சட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில்; விளக்கமளிக்கப்பட்டன.
சட்டத்தரணி எம்.பி.அன்வார், உதவி காணி ஆணையாளர் எஸ்.ரவிராஜ், சட்டத்தரணி எஸ்.லட்சுமி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago