2025 ஜூலை 12, சனிக்கிழமை

திருமலையில் மீனவர் நீரில் மூழ்கி மரணம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம்  குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு வாழையூற்று இறக்கண்டி என்னும் இடத்தில் நீரில் மூழ்கி மீனவர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

காளிமுத்து ரவிச்சந்திரன் (வயது 38) என்ற  3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணமானவர் ஆவார்.

குறித்த மீனவர் நேற்று வியாழக்கிழமை  மாலை அருகில் உள்ள நீரோடையில் தொழிலுக்காகச்  சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

சடலம் குச்சவெளி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .