2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மீனவரை கடித்த முதலை

Suganthini Ratnam   / 2011 மே 06 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை, மொறவெவ பகுதியிலுள்ள  குளத்துக்கு மீன்பிடிக்கச்  சென்ற ஒருவர் முதலை கடித்த நிலையில் மகதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி டாக்டர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

மொறவெவ பகுதியைச் சேர்ந்த கே.அன்டனி (வயது 26) குணவர்தனபுர என்பவரையே முதலை கடித்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக குளத்துக்குச் சென்று வலையை வீசிய இந்த மூவரும்  இன்று வெள்ளிக்கிழமை  அதிகாலை வலையிலுள்ள மீன்களை பெறுவதற்கு சென்றபோது மேற்படி நபரை முதலை கடித்ததாக மீனவரொருவர் குறிப்பிட்டார்.

மகதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X