Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 08 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை மாவட்டத்தின் மேற்கு தம்பலகாமம் பிரதேச சபை பிரிவில் கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இந்த கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் அப்பிரதேசசபையின் தலைவர் எம்.எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இப்பிரதேசத்தில் கால்நடைகளை வளர்ப்போர் அவற்றை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது மீறி நடப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், கட்டாக்காலி மாடுகளை பிரதேசசபை பிடித்துவைத்து தண்டப்பணம் அறவிடுமெனவும் அவர் கூறினார்.
மாடுகளை வீதிகளில் திரிய வீடுவது சட்டவிரோதமானதாகுமெனவும் எம்.எஸ்.சுபியான் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago
1 hours ago