2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மூதூர் தள வைத்தியசாலையின் இரத்த வங்கி திறப்பு

Super User   / 2011 நவம்பர் 13 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் தள வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட இரத்த வங்கி இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேம் ஆனந் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம் தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அபு உபைதா ராஸிக் பரீட், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வீ. பிரேம் ஆனந் முதலாவதாக இரத்த தானம் செய்தார். இதனையடுத்து பொதுமக்கள், வைத்தியசாலை ஊழியர்கள், இராணுவத்தினர் என நூற்றுக்கு அதிகமானோர் இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • nawfal Monday, 14 November 2011 05:10 AM

    குணநாதன் மாஸ்டர், நவமலர் மிஸ், ஜெயபாலன் சிஸ்டர் உங்களை கண்டது சந்தோசமாக இருக்குது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X