2025 மே 03, சனிக்கிழமை

மூதூர் வைத்தியசாலையில் கண்சிகிச்சை முகாம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 07 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

திருகோணமலை லயன்ஸ் கழகமும் மூதூர் தளவைத்தியசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து கண்சிகிச்சை முகாமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மூதூர் தளவைத்தியசாலையில் நடத்தியது.

இம்முகாமில் பலதரப்பட்ட கண்நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதோடு, கண்பார்வை குன்றியவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அத்தோடு, கண்ணில் வெண்படலாம் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மூதூர் தளவைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் வி.பிரேம் ஆனந்த் மேற்பார்வையில் டாக்டர் விஜயகுமார் தலைமையிலான வைத்திய குழுவினரின் பங்களிப்புடன் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் மாணவர்கள் பொதுமக்களென பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • nawfal Wednesday, 08 February 2012 06:10 AM

    வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் பொழுது மூதூரில் கண் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம் இருக்கின்றதை அவதானிக்கலாம். இம் முயற்சி தொடருமானால் அதிக மக்கள் நன்மை அடைவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X