2025 மே 03, சனிக்கிழமை

மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)    

 

மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.எஸ்.ஏ.மானாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ருப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி ஆணையாளர் திணைக்களத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் இம்முத்திரை முலம் மாதாந்தம் 200 ரூபாவிற்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 3,265 குடும்பங்களுக்கு இந்த மண்ணெண்ணெய் முத்திரை தேவையுடையவர்களாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X