2025 மே 08, வியாழக்கிழமை

மூதூரில் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விக் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அல்-மனார் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.பாரூக், உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.நற்குணம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணைப்பாளர் எஸ்.ஜனார்த்தன், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.ஜே.ஜப்பார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது முறைசாராக் கல்விக் கிளையினால் நடத்தப்பட்ட கணினி, தையல்  முதலான பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதோடு கண்;காட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X