2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஆளுநருடன் தூதுவர்கள் கலந்துரையாடல்

Mayu   / 2024 மார்ச் 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்  ஹஸ்பர்

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம்  இணக்கம் வெளியிட்டனர்.

இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க ,ஆளுனர் செயலக  செயலாளர் எல்.பி மதநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X