Janu / 2024 ஜூலை 28 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலகாமம் பிரிவுக்கு உட்பட்ட 99 ஆம் கொலனி பிரதேசத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (26)அன்று 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்பலகமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹைரியா நகர், புல்மோட்டை -1 என்ற இடத்தை செர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்து விற்பனைக்கு முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , அவரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக்கொண்டுதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
ஏ. எம். கீத்
1 hours ago
4 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
16 Jan 2026