2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

ஜீப் 50 அடி உயரத்திற்கு மேலெழும்பி விபத்து: வர்த்தகர் பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அதிவேக வீதியில் அதிசொகுசு ஜீப்பொன்று சுமார் 50 அடிக்கு மேலெழும்பி விபத்துக்குள்ளானதில் வர்த்தகர் பலியானதுடன் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளனர். அந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட மகன் மற்றும் செல்லப்பிராணியான நாய்க்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.

மஹரகமவிலிருந்து தங்கலைக்கு விடுமுறை கழிப்பதற்கு சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகத்தை செலுத்திச்சென்ற குறித்த வர்த்தகர் இருக்கைப்பட்டியை அணியாமல் சென்றமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வாகனம் சுமார் 50 அடி உயரத்திற்கு மேலெழும்பி கீழே விழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தென் அதிவேக வீதியில் 14 ஆவது மைற்கல்லிற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் வாகனத்தை செலுத்திச்சென்ற குறித்த வர்த்தகர் வாகனத்திலிருந்து வெளியே வீசப்பட்டு அதேவாகனத்தில் நசுக்குண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X