Kogilavani / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிக்கடுவ - பத்தேகம வீதியின் நலாகஸ்தெனிய பகுதியில், காரொன்றும் கென்டர் ரக வாகனமொன்றும் வானொன்றும், ஒன்றுடன் ஒன்று மோதுண்டு இடம்பெற்ற விபத்தில், 8 பேர் காயமடைந்த நிலையில், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரும் கென்டர் ரக வாகனமும், பத்தேகம நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கும் போது, முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கார், பின்னால் வந்துகொண்டிருந்த கென்டர் வாகனத்தில் மோதுண்டு பாதையை விட்டு விலகியதில், எதிரே வந்துகொண்டிருந்த வானில் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தால் காயமடைந்தவர்களில் கர்ப்பிணியொருவரும் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாகத் தெரிவித்த ஹிக்கடுவ பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025