2024 மே 09, வியாழக்கிழமை

மாட்டுவண்டியில் சபைக்கு வந்த 'தங்கம்'

Kanagaraj   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாண சபை உறுப்பினரான ரத்தரங்(தங்கம்) என்றழைக்கப்படும் நிஷாந்த புஷ்பகுமார, இன்றைய  அவையமர்வுக்கு மாட்டுவண்டியில் வருகைதந்தார்.

மாட்டுவண்டியை அவைக்கு முன்பாக உள்ள மரமொன்றில் கட்டிவைத்து பூட்டிவிட்டே சபையமர்வில் கலந்துகொண்டார்.

திருத்துவதற்காக வாகனம் திருத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த காரை, ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமானது எனக்கூறி பொலிஸார் எடுத்துசென்றுவிட்டதாகவும் பொலிஸாரின் அந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தான் மாட்டுவண்டியில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் வாகனம் எனக்கூறி முடிந்தால் மாட்டுவண்டியையும் எடுத்துசெல்லுமாறு கூறிக்கொண்டே அவர், மாட்டுவண்டியில் வருகைதந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .