Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தினத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தங்குமிட விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து பல அதிருப்தியான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றமை தெரிந்ததே.

16 minute ago
25 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
58 minute ago