Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 24 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து, 294 கிலோகிராம் ஹெரோய்ன் பொலிஸ் விசேட படையணியால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ஹெரோய்ன் இதுவென்பதுடன், இதன்போது 32, 43 வயதான பாணந்துறை, செகல்வத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு வான்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 2945 மில்லியன் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்தே குறித்த ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
9 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
4 hours ago