2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

''இராஜினாமா வேண்டாம்''

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை, அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என தேரர்கள் குழுவினர் இன்று (21) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பௌத்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்திருந்தனர்.

அமைச்சரை சந்தித்து ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோருவதற்காகவும் வருகை தந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அமைச்சர் அங்கு வருகை தராத காரணத்தினால் அதிகாரிகளை சந்தித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும். எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை விடுப்பதாக, தேரர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X