2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐஎம்எப் அனுமதி கிடைத்தது

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

நாட்டில் பெரும்பொருளாதார உறுதித் தன்மையை மீள நிலைநாட்டவும், கடன் மீளச் செலுத்தக்கூடிய உறுதித் தன்மையையும் எய்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.

இதனூடாக பொருளாதாரத்தை பல சவால்களிலிருந்து மீட்டு, சகல பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .