2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஓய்வுபெற்ற பின்னரும் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க அனுமதி

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னரும், தற்போது பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

கொழும்பு7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு இவ்வாறு வழங்கப்படவுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X