2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“கோட்டா கோ கம” போராட்டக்காரர்களுக்கு : பொலிஸார் அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2022 மே 11 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக காலிமுகத்திடல் பகுதியில் அமைதிப் போராட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், தற்பொழுது அங்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது ஜனாதிபதி செயலகத்துக்கு மேலாக கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் இந்த அறிவிப்பு பொலிஸாரால் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எவரும் பொது இடங்களில்  ஒன்று கூட முடியாது என அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் எந்தவோர் இடத்திலும் அது கடற்கரையாக  இருக்கலாம் உரிய அனுமதியின்றி ஒன்று கூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடும் என  தொடர்ச்சியான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரினால் அவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படும் போது அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த “கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள், கோட்டா கோ கம” என உரக்க சத்தமிட்டு, பொலிஸாரின் அந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .