2025 மே 14, புதன்கிழமை

ஞானசார தேரர் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞானசார தேரர் உள்ளிட்ட 4 பேரை நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு நாயாறு குருகந்த ரஜமஹா விஹாராதிபதியின் இறுதிக்கிரியை தொடர்பான நீதிமன்றின் உத்தரவை மீறிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசாவால் நீதிமன்ற அவமதிப்பு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த நீதிமன்ற அவமதிப்பு மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் யசந்த கோதாகொட மற்றும் அர்ஷுன ஒபயசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவுக்கு ஆதரவாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர்  மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, பிரதிவாதிகளை நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதியரசர்கள்  உத்தரவு பிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .