2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் பரிந்துரைகள்: மஹிந்த தலைமையில் கூட்டம்

Editorial   / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, தேர்தல்கள் ஆணையாளர்கள் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், இன்று (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கு முன்னார், ​தேர்தலுக்கான பரிந்துரைகள், 27ஆம் திகதியே அறிவிக்கப்படும் என்று, ஆணையாளர் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து ​வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு, எதிர்வரும் 04ஆம் திகதி வரையிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்த அந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராக, வாக்காளர்கள் அறுவரினால், ரிட்-மனுக்கள் தாக்கல் செ ய்யப்பட்டிருந்ததையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது,

எனவே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலும், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, மாகாணசபைகள் தேர்தலை நடத்துதல் தொடர்பான, கட்சித் தலைவர்களுக்கிடையே​யான கலந்துரையாடலும், நேற்று (24) மாலை இடம்பெற்றிருந்தது. எனினும், இந்தக் கலந்துரையாடலின் போது, எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X