Editorial / 2024 நவம்பர் 28 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் டிசம்பர் 4ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நவம்பர் 30, டிசம்பர் 2, டிசம்பர் 3 ஆகிய திகதிகளில் பரீட்சைகளை நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிட்ட பாடங்களுக்கான பரீட்சைகள் டிசம்பர் 4ம் திகதி கீழ்கண்ட முறையில் நடத்தப்படும்.
# நவம்பர் 28 வியாழக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 23ஆம் திகதியன்றும்
#நவம்பர் 29ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 27ஆம் திகதியன்றும்
#நவம்பர் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 28 சனிக்கிழமையும்
#டிசெம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமையும்
#டிசெம்பர் 3ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படாத பரீட்சை டிசெம்பர் 31ஆம் திகதி செவ்வாய்கிழமையும் நடத்தப்படும்.
48 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
52 minute ago