2025 மே 14, புதன்கிழமை

பூஜித் ஜயசுந்தர பிணையில் விடுதலை (UPDATE)

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (UPDATE) கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியை செயற்படுத்தும் ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான  சி.சி.ரி.வி. காணொளி அந்தக்காலப்பகுதியில் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

குறித்த காணொளியில் பொலிஸ்மா அதிபர் மின்தூக்கி ஊழியரின் சட்டடையை பிடித்து உலுக்கி, மிரட்டும் தொனியில் நடந்துகொள்வதும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், இன்று (01)  கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .