2024 மே 03, வெள்ளிக்கிழமை

மைத்திரிபால இராஜினாமா?

Editorial   / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி தலைவர் பதவியில்  இருந்து விலகும் தலைவர், கட்சியின் போஷகர் பதவிக்கு நியமிக்கப்படுவார்.

தற்போதும் கட்சியில் கடும் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், இரு பிரிவினரும் இரண்டு பதில் தலைவர்களின் பெயர்களைக் கூறி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .