2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

'வீதி விபத்தைத் தடுப்போம்'

Princiya Dixci   / 2016 நவம்பர் 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி விபத்தினைத் தடுக்கும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கை, யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை (17) நடத்தப்பட்டது.

ஏறத்தாழ 22 அமைப்புக்களின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையின் போது, வாகனங்கள் மறிக்கப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

மன்றத்தின் சார்பாகப் பலரும் கலந்துகொண்டிருந்ததோடு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.திருச்செந்தூரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .