Janu / 2024 ஜனவரி 02 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அதிகூடிய நீர் கொள்ளளவைக் கொண்ட நீர்த்தேக்கமாக அறியப்படும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சேனநாயக்க சமுத்திரத்தில், 10 வருடங்களின் பின்னர் 05 வான் கதவுகள் திறக்கும் நிகழ்வு நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதத் கமகேவின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட தலைவர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.

இவ்வாறு திறக்கப்பட்டுள்ள 05 வான் கதவுகளில் இருந்து வினாடிக்கு 900 கன அடி வேகத்தில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், புதன்கிழமை (02) நண்பகல் நிலைவரப்படி நீர் கொள்ளளவான 104.3 அடி உயரம் காணப்பட்டதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.




சுமனசிரி குணதிலக்க
35 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
5 hours ago