Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட கட்டைபறிச்சான் பகுதியிலுள்ள இறால் பாலத்துக்கு மேலால் கடல் நீர் வடிந்தோடுவதால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் அம்மன்நகர், கணேசபுரம், கட்டைபறிச்சான், பள்ளிக்குடியிருப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உயிராபத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
சுமார் 50 வருடங்கள் பழைமையான இப்பாலத்தின் சில பகுதிகளில் வெடிப்புக்களும் காணப்படுகின்றன. பாலத்தை உரிய அதிகாரிகள் புனரமைத்துத் தந்தால் அச்சமற்ற நிலையில் இறால் பாலத்தினூடாகப் பயணிக்க முடியுமென, மக்கள் தெரிவிக்கின்றனர்.
(படங்கள் - தீஷான் அஹமட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .