2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களை கண்டித்து…

Editorial   / 2021 டிசெம்பர் 31 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று (31) போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

வலி.வடக்கு மீனவர் சமாஜம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில்  மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய்”, ”கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு” போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X