2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கடல்நீரேரிக்குள் பாய்ந்த வாகனம்...

Princiya Dixci   / 2016 நவம்பர் 07 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வல்வைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (07) அதிகாலை, கடல்நீரேரிக்குள் பாய்ந்து, படி ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமுறுகண்டி, 154 கட்டைப் பகுதியினை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் (வயது 20), தங்கையா போதுராஜ் (வயது 23) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நெல்லியடிச் சந்தையில் வாழைக்குலைகளை ஏற்றுவதற்கான சென்றுகொண்டிருந்த போது, முன்சக்கரம் காற்றுப் போனதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், கடல் நீரேரிக்குள் பாய்;ந்துள்ளது. (படப்பிடிப்பு:   செல்வநாயகம் கபிலன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X