Editorial / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, விசுவமடு விஞ்ஞானக் கல்வி நிலையமும் விசுவமடு மத்திய சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய நிலா முற்றம் கலை விழா, விசுவமடு மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று (16) மாலை நடைபெற்றது.
ஆசிரியர் வே. பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் டொக்டர் மா. ஜெயராசாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கௌரவ விருந்தினராக விசுவமடு மண்ணின் மைந்தர் கவிஞர் மாணிக்கம் ஜெகனும் கலந்துகொண்டனர்
விசுவமடு விஞ்ஞான கல்வி நிலையத்தில் தற்போது 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - சுப்பிரமணியம் பாஸ்கரன்)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .