Freelancer / 2021 ஜூன் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டிலிருந்து ஒழியவும் அந்த வைரஸில் இருந்தும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு பெற்று சுகதேகிகளாக வாழும் நோக்கில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரளவின் வழிகாட்டலுக்கமைய நேற்றிரவு (01) மாவட்ட செயலகத்தில் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றது.
தற்போதுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற பிரித் நிகழ்வில், சங்கைக்குரிய தேரர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதங்கள் வேண்டி பிரார்த்தித்துள்ளார்.
பிரித் நீர் தாங்கிய பிரத்தியேக வாகனமொன்று தேரர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் திருகோணமலை நகரின் வீதிகளில் வலம்வந்ததுடன் மக்களுக்கு பிரித் நீரையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. (படங்களும் தகவலும் ஏ.எம்.ஏ.பரீட்)


1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago