2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களின் இழப்புக்கு நியாயம் கோரி...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (24) காலை மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடிய மாணவர்கள் அனைவரும், யாழ். மாவட்டச் மாவட்டச் செயலகத்தின் இரு வாயில்களையும் மறித்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களை உட்செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதியான விசாரணையை வலியுறுத்தியே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X