Janu / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சியில் மேச்சல் நிலம் கோரி மாடுகளுடன் பண்ணையாளர்கள் புதன்கிழமை (02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனனர்.

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கால்நடைவளர்ப்பாளர்களே
தங்களுக்குரிய மேச்சல் நிலத்தை கோரி இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட காலமாக தங்களுக்குரிய மேச்சல் நிலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விதைப்பு மற்றும் வறட்சியான காலங்களில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் கடும்
நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள கால்நடை வளர்ப்பாளர்கள்சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தல்உரிய கவனம் செலுத்தி விரைவாக மேச்சல் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
மு.தமிழ்ச்செல்வன்


9 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
1 hours ago
2 hours ago