Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 30, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2016 மே 03 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 124ஆவது ஜனன தினத்தையொட்டி கல்லடியில் அமைக்கப்பட்டுள்ள சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழாச் சபையினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா , சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நூற்றாண்டு விழாச் சபையின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா, பொருளாளர் டி.ஜூவராஜ் உள்ளிட்ட சமய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் , கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ; 'வெள்ளளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ' என்ற பாடலைப் பாடினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
29 May 2025