2024 மே 09, வியாழக்கிழமை

விசேட கலந்துரையாடல்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன் அண்மையில்  மட்டகளப்பு மாவட்ட தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் அதிகாரசபைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மட்டகளப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை மேம்படுத்தி தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில்  ”தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் அதிகாரசபையின் தலைவர் தரங்க நளின் கம்லத், தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் எஸ்.வீ.பீ.விக்ரமசிங்க, மட்டகளப்பு மாவட்ட தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் அதிகாரசபையின் முகாமையாளர் சாலி மௌலானா ஆகியோர் பங்குபற்றினர். 










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X