Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதலாவது போட்டி அடிலெய்டு நகரில் இன்று (27) காலை தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என முடிவு செய்தது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழந்து 233 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் இலங்கைக்கு 234 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியில் ஆரம்பத்தில் இருந்து ஓட்டங்கள் சேர்க்க வீரர்கள் தவறி விட்டனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்த போட்டி எதிர்வரும் புதன்கிழமை பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026