2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

20-20 போட்டியில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒற்றை டுவென்டி, டுவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஒய்ன் மோர்கன் 71 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹேல்ஸ் 40 ஓட்டங்களையும், ஜோ ரூட் 26 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சமி 3 விக்கெட்களையும், மோஹித் ஷர்மா, ரவீந்தர் ஜடேஜா, கார்ன் ஷர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. இதில் விராத் கோலி 66 ஓட்டங்களையும், ஷிகார் தவான் 33 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின், மூயேன் அலி,  ஹரி குர்னி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களைக் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .