2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்துடனான ஒரு நாள் போட்டித் தொடரை கைபற்றியது இலங்கை

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைஇ இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்ப் போட்டித் தொடரை இலங்கை அணி 3 இற்கு 2 என்ற ரீதியில் கைபற்றியுள்ளது.

ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை தனதாக்கியது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலஸ்ரயர் குக் 56 ஓட்டங்களையும்இ இயன் பெல் 37 ஓட்டங்களையும்இ கிறிஸ் ஜோர்டான் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 50 ஓட்டங்களிற்கு  3 விக்கெட்களையும். அஜந்த மென்டிஸ் 50 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் லஹிறு திரிமான்னே ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும்இ மஹேல ஜெயவர்தன  53 ஓட்டங்களையும் இ அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிலக்கமல் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் ரெட்வவெல் 30 ஓட்டங்களிற்கு 2  விக்கெட்களைக் கைப்பற்றினர்.

லஹிறு திரிமான்னே போட்டியின் நாயகனாக தெரிவான அதேவேளை லசித் மாலிங்க தொடர் நாயகனாக தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தரபப்டுத்தல்களில் இரண்டாமிடத்தைப்  பெற்றுள்ளது. இரண்டாமிடத்தில் இருந்த இந்தியா அணி மூன்றாமிடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ள அதேவேளை இங்கிலாந்து அணி நான்கமிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .