2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

நான் ஓய்வு பெறவில்லை: சகிப் அல் ஹசன்

A.P.Mathan   / 2014 ஜூலை 06 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணியின் வீரர் சகிப் அல் ஹசன், தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிக்கவில்லை என தெரிவித்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்குபற்றச் சென்ற போது அவருக்கு உடனடியாக அணியின் பயிற்சி முகாமில் இணையுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது. அதனையடுத்து தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகப்போவதாக அறிவித்ததாக பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துரசிங்ஹ, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவருக்கு எழுத்து மூலமாக அறிவித்ததாக தலைவர் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் ஹத்துரசிங்ஹ தான் அதை கூறியதாகவும் தான் அப்படியான கருத்துகளை கூறவில்லை எனவும் டாக்கா விமான நிலையத்தில் வைத்து சகிப் அல் ஹசன் தெரிவித்தார். தான் அணியுடன் பிந்தி இணைவதற்கு ஹத்துரசிங்ஹவிடம் மன்னிப்பு கோருவதாகவும், தான் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிர்வாக முகாமையாளர் அக்ரம் கான் சம்மதம் தெரிவித்ததாகவும் சகிப் அல் ஹசன் கூறியுள்ளார். 
 
இந்த பிரச்சினை சிறியது எனவும், அப்பாவிடம் கோவித்துக் கொண்டு சாப்பாடு வேண்டாம் என சொல்வது போன்றது எனவும் மேலும் கூறியுள்ளார். தான் 2023ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணிக்காக விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .