2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இங்கிலாந்து அணியை வென்றது இந்திய அணி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்று மோசமான டெஸ்ட் தோல்விகளில் இருந்து மீள் வருகை ஒன்றை வெளிக்காட்டியுள்ளது. இந்திய அணி டக் வேர்த் லூயிஸ் முறையின் படி 133 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் இதே போன்ற முன்னிலையைப் பெற்று பின்னர் மோசமான தொடர் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 
 
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. இந்திய அணி, சுரேஷ் ரைனாவின் வேகமான சதம் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றது. சுரேஷ் ரைனா, 75 பந்துகளில் 100 ஓட்டங்களையும், டோனி, ரோஹித் ஷர்மா ஆகியோர் தலா 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் ட்ரேட்வெல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த வேளையில் இரண்டு தடவைகள் மழை குறுக்கிட, போட்டி 47 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டு, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலெக்ஸ் கேல்ஸ் 40 ஓட்டங்களையும், ஒய்ன் மோர்கன் 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 4 விக்கெட்களையும், மொஹமட் சமி, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
போட்டியின் நாயகனாக சுரேஷ் ரைனா தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .